வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார்.

இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு பர்கர் கிங்கில் இருந்து ஒரு லார்ஜ் ஆனியன் ரிங்க்ஸ்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே வெளியே போனேன். ஸ்பானிஷ் பாட்டி, ஸ்பார்கியை லீஷில் பிடித்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் கடிகாரத்தை பார்த்து ஸ்பார்கி எகிறி எகிறி குரைத்த போது உரைத்தது. இன்னிக்கு Daylight Saving Time முடிகிறது. Spring forward , Fall Back என்பார்கள். அப்படியானால் நேற்று இரவு 2 மணிக்கு, கடிகாரத்தை திருப்பி 1 மணிக்கு வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் மிச்சம். மாற்றாத என் கடிகாரத்தில் காட்டிய ஆறரை ஆக்சுவலாக இப்போது ஐந்தரை காட்ட வேண்டும். ஆக திருடனை பிடிக்க எழுந்ததில், வீக்கெண்ட் தூக்கம் பாழ்.


குளிர் வந்தாகிவிட்டது. நேற்றும் இன்றும் ஸீரோ டிகிரியில் வீசிய காற்று, மூடிய ஜன்னல்களில் நுழைந்து, இன்னும் இரண்டு போர்வை கேட்கிறது. மக்கள் நடமாட்டம் மால்களில் குறைகிறது. எல்லோரும் எதோ சிட்காம் பார்த்துக்கொண்டோ, இண்டர்நெட்டில் துணை தேடிக்கொண்டோ, பாப்கார்ன் கொறித்து, அமெரிக்க ஒபிஸிட்டியை ஆளுக்கு ஒரு calorieயாக கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத calorie consumptionக்காக சூப்பர் பவுலும், என்.பி.ஏவும் காத்துக் கொண்டிருக்கின்றன.

என்ன தான் மழை அடித்தாலும் ரோடில் தண்ணி பெருக்கெடுப்பதில்லை. குண்டும் குழியும் காணக் கிடைப்பதில்லை. எந்த கழக கண்மணி நாட்டை ஆண்டாலும், infra-structureஐ மட்டும் தப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் நம்மூர் ஜெமினி பிரிட்ஜ் மாதிரி ரெண்டு மடங்கு பெரியதாக பிரிட்ஜ் கட்டி ஒரு வீக்கெண்டில், திறப்பு விழா நடத்தாமல், இங்கு வீற்றிருக்கும் நகராட்சி தலைவர் அவர்களே என்று சோடா உடைக்காமல், நடை திறக்கிறார்கள்.


போன வாரம், NPR என்னும் பொது மக்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் Public Radio கேட்டுக் கொண்டே கார் ஓட்டிய போது விவிதபாரதியின் நேயர் விருப்பத்தையும், கடயநல்லூர் ராமசாமியையும் மிஸ் பண்ணினேன். இது போல் தெரியாத ஊர்களிலிருந்து ராமசாமிகளும், புழுதிவாக்கம் மோகன்களும், கைக்காங்குப்பம் சரவணன்களும், குடவாசல் கோமதிகளும், கேட்கும் பாடலை ஒலிபரப்பும் விவிதபாரதியும், அதை சரளமாக படிக்கும் அந்த வெண்கல குரலையும், அதற்கு பின் வரும் அந்த not-so-popular பாடலையும், மறுபடி கேட்பதெப்போது. தொலைந்து போனது நானா, அவர்களா அல்லது நாங்களா ?


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>