balakumaran.jpg

“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.

உங்களுக்கு பாலகுமாரனை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தவற விடக்கூடாத ஒரு monologue பேட்டி இது.

இந்த முப்பது நிமிடத்தில் ஆன்மீகம், இறைவன், குருநாதர், குடும்பம், வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய பேசினாலும், தான் படைப்பாளியான கதையை சொல்லும் அந்த ஐந்து நிமிடம் மிக சுவாரசியம். மேலிருக்கும் வார்த்தைகளை அவர் egoவோடு சொல்லவில்லை என்பது பார்த்தால் புரியும். ஆறு பாகம் உடையார் எழுதி முடித்ததை பற்றி சந்தோஷப்படுகிறார். 237 நாவல்களும் மணிமணியான நாவல் என்கிறார்.

இன்றுவரை குமுதம் வெப் டீவி, ஆனந்த விகடனை தாண்டி செல்ல வேண்டும் என்ற குமுதத்தின் ஒரு மார்கெட்டிங் முயற்சி என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று நிதானமாக பல வெப் டீவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் அதில் உள்ள ஆர்வம் தெரிகிறது. ரவி பெர்னாடின் பேட்டிகளில் கொஞ்சம், மற்றவரை பேச அனுமதிப்பாராயின் நலம். இன்று பார்த்த கவிஞர் வாலியின் பேட்டியிலும், அன்று பார்த்த பா ராகவனின் பேட்டியிலும் அவர் நடுநடுவே பேசியதால் சில சுவாரசியங்கள் மிஸ்ஸிங். மற்றபடி, வெப் டீவியிலும் மெகா சீரியல்கள் வந்துவிடாமலிருந்தால் சரி.


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>