kirukkal.com in ananda vikatan

இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன்.

படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி.

சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை.

என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும்.

போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய் இருக்கிறது. யார் யாரோ, “கலக்கறீங்க சார்” என்று மெயில் அனுப்புகிறார்கள். விகடனின் ரீச் தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி !!

“விகடன்ல எல்லாம் போட்ருக்காங்க, இன்னும் அதை update பண்ணாம இருக்கியே அசமஞ்சம்” என்று நினைப்பவர்களுக்கு, ஹிஹி !!. கூட்டம் வரும்போதே, இந்த வலைதளத்தில் எழுதித் தள்ளி, யாரையும் போரடிக்கிற எண்ணமில்லை. வழக்கம் போல எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல புத்தகமோ/படமோ/விஷயமோ பற்றி எழுத தோன்றி நேரமிருக்கும் போது, கண்டிப்பாய் கிறுக்கல்.

பி.கு – இப்போதைக்கு படிக்க கிறுக்கலின் பழைய பத்திகள் அல்லது இருக்கவே இருக்கு கிறுக்கலின் ஆங்கில பதிப்பு.


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>