டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும்.
கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது. கேட்கலாம். இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு இசை அமைப்பது கொஞ்சம் கடினமும் கூட. காலேஜ்வாசிகளை கவர, கொஞ்சம் லைட்டாய் இனிய வரிகளை வைத்து டூயட் கூட போட முடியாது. ஸ்ருதிக்கு எல்.ஏயில் இசை படித்ததாலோ என்னவோ சாஸ்திரிய சங்கீதத்தை விட ராக் இசையின் ரிதம் சுலபமாக வருகிறது. மெலடிக்களில் கூட தன்னையறிமால் வந்து விழுகிறது எலக்ட்ரிக் கிடார்.
கமல் கொஞ்சம் ஆர்பாட்டமில்லாமல் அல்லா ஜானே பாடலை பாடியிருக்கலாம். நிலை வருமா பாடலில் எஸ்பிபி சிரிப்புகள் செய்யாமல் இருந்திருக்கலாம்.
ஆல்பத்திலேயே பிடித்தது, கீதையின் வரிகளை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல். அதிலும் இந்த இடத்திலிருந்து(2:09 முதல்) பிரமாதம். மற்றபடி பாடல் வரிகள் ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த வரிகளை வைத்து எழுதியிருப்பதை கவனித்தீர்களா ?
எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச திரைக்கதை மனசில் ஒட்டவில்லை.
மற்றபடி இந்த மாதிரி சினிமா வந்தா தான் இந்திய சினிமாவுக்கு நல்லது என்ற ____வுட் ’டாக்’ எல்லாம் கேட்டு அலுத்து விட்டாயிற்று. இதை பார்த்த பின் கமல் எடுத்த இதன் தமிழ்ப் பதிப்பை பார்க்க ரொம்பவும் எதிர்பார்ப்பில்லை. தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலே கதையை சொல்லாமல் இருக்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்றெல்லாம் சொல்லியும் தமிழர்களுக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை என்றால், அவர்களை ப..பு..தி.
தில்லி 6 – அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, மக்களை விரும்பி, பெண்ணை சைட் அடித்து, லோக்கல்வாசிகளிடமிருந்து உதை வாங்கி/கொடுத்து, அமெரிக்கா திரும்பிச் செல்ல மறுக்கும் சுவதேஸ கதை. இதைத் தவிர ஹேராம் பிரச்சனைகள். மனதில் தங்கிப்போனதற்கு காரணம் இரண்டு விஷயங்கள். எதோ காமெடிக் கிளைக் கதையாக ஆரம்பித்த கருப்பு குரங்கு விஷயம் அனுமார் வாலாக நீண்டு திரைக்கதையின் திருப்பத்திற்கு உபயோகப்பட்டிருப்பதும், பிரபல கவிஞரை ஞாபகப்படுத்தும் முகத்துடன் வரும் அந்த மனநிலை சரியில்லாதவரின் உனக்குள் கடவுள் தத்துவமும்.
வழக்கம் போல பின்னியிருக்கும் ரஹ்மானின் பாடல்களை சரியாக உபயோகிக்காததால் தில் கிரா தஃப்பதனை தவிர மற்றதெல்லாம் சுமார். காலா பந்தரில் ராப் ஆட்டம் ஆடும் ஜுனியர் பச்சன் எம் டிவி பார்த்ததில்லை போலும்.
நாடோடிகள் – கலக்கலாயிருக்கிறது என்று சிலர் சொன்னதால் பார்த்தால், செம கடி. உப்புமா கதை/தி.கதை. சுப்பிரமணியபுரம் தந்த தைரியத்தில் எடுத்த படம் போல தெரிகிறது. சசிகுமார் ஒரே மாதிரி தாடி வைத்து, மையமாக சிரித்து, இறுக்கமாகவே இருக்கிறார். யதார்த்த தமிழ் சினிமா போலவே ஆரம்பித்தாலும், க்ளைமாக்ஸ் திருப்பத்தில், நண்பர்கள் மூவரும் ஸ்லோமோஷனில் பழி வாங்க நடக்கும் போது கோலிவுட் தெரிகிறது. படத்தில் ரொம்பவே ஸ்லாப்ஸ்டிக் காமெடி.
Listening to Cat Stevens the whole of y’day was solacing. A Deep voice, lonely acoustic guitar strums and subtle harmony characterized Cat Stevens’ music. So if you like such a setting, he is the master-blaster.
This blog has already become a collection of youtube bookmarks. Adding to it, here is one more that influenced my late teen/early twenties(now that I have moved away from it). This song has much more to it than just Cat’s voice. The lyrics, in form of a dialogue between a father and son reveals a father’s remarks on his life behind him and for the son, the life ahead of him. Such philosophy!
Not a big fan of the online facebookish tests but found this one interesting because of the way data mining is being used[click on read more...and then how it works]. I would love to read more on this algorithm. But just in case you like wasting time on social networking sites, you can also try this.