டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும்.

கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது. கேட்கலாம். இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு இசை அமைப்பது கொஞ்சம் கடினமும் கூட. காலேஜ்வாசிகளை கவர, கொஞ்சம் லைட்டாய் இனிய வரிகளை வைத்து டூயட் கூட போட முடியாது. ஸ்ருதிக்கு எல்.ஏயில் இசை படித்ததாலோ என்னவோ சாஸ்திரிய சங்கீதத்தை விட ராக் இசையின் ரிதம் சுலபமாக வருகிறது. மெலடிக்களில் கூட தன்னையறிமால் வந்து விழுகிறது எலக்ட்ரிக் கிடார்.

கமல் கொஞ்சம் ஆர்பாட்டமில்லாமல் அல்லா ஜானே பாடலை பாடியிருக்கலாம். நிலை வருமா பாடலில் எஸ்பிபி சிரிப்புகள் செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆல்பத்திலேயே பிடித்தது, கீதையின் வரிகளை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல். அதிலும் இந்த இடத்திலிருந்து(2:09 முதல்) பிரமாதம். மற்றபடி பாடல் வரிகள் ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த வரிகளை வைத்து எழுதியிருப்பதை கவனித்தீர்களா ?


scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>