
தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள்.
அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து, மால்களில் கட்டிப்பிடித்து காதல் செய்து, வேகாஸ் இரவில் ஸ்னூக்கர் தட்டி விட்டு, கோல்டன் கேட்டில் டூயட் பாடுவதெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்து மற்ற தமிழ்/இந்தி சினிமாவில் மட்டும் தான். இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம். கிட்டத்தட்ட.
இந்த இரண்டு நிமிட, எல்லோருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே செல்லும் கதையை, அறிமுக டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தில் இருந்தால் ஒழிய எடுத்திருக்க முடியாது. பயப்பட வைக்கவே இல்லையென்றாலும், யதார்த்த சம்பாஷனைகளால் ரசிக்க முடிகிறது. பொழுதுபோக்கு சினிமாவில் மெசேஜ் என்று கடைசியில் க்ராபிக்ஸில் பூச்சிபூச்சியாய் புள்ளிவிபரம் போடுவதால் பயனில்லை. அல்லது உள்ளது, அவார்டுக்கு.
ப்ரசன்னாவும் ஜான் ஷியாவும் அந்த குட்டிப் பெண்ணும் தன் பங்கை செய்திருந்தாலும் படத்தில் வீக் லிங்க் சுமாராக டைலாக் டெலிவரி செய்யும் சினேகா தான். ரொம்பவே சிரமப்படாமல் ஹாலிவுட்டில் எதாவது பயிற்சி வகுப்பிற்கு போயிருந்தால் சினேகாவிற்கு இந்த மாதிரி ஆட்டு மந்தைதனம் இல்லாத தமிழ் சினிமாக்களில் சான்ஸுண்டு.
subbudu | # | 9:39 pm | பயாஸ்கோப் | Comments Off
How much ever I liked the second and third seasons of Jodi No 1, I loathe the nutty program that is Boys Vs Girls. Donno who designed it but Vijay TV should be crazy to even have a season 2 for it.
First, it seems like a college rag show but ironically the participants seem to be middle aged like the kollywood heroes. Secondly, nobody dances for a full song and they seem to have copied the Maanada Mayilaada format of creating a short story for a every performance with voice overs. Why can’t a dance program be just about dance ? Insane stuff!
subbudu | # | 4:58 pm | மீடியா, On Tv | Comments (5)
போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல், நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…
தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
————-
சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.
இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்), முடிக்கக் கூடிய வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.
எழுத்தாளர் பாராவின் கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.
————-
பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.
subbudu | # | 8:34 pm | இன்னபிற, இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை, பயாஸ்கோப் | Comments Off
No Pun Intended. Can you just stop typing on that damned keyboard, close your eyes and the info-overloaded unsociably-networked-browsers to listen to this music for exactly five minutes and fifty nine seconds.
With the eyes closed, try not to think of how best you can ReTweet this damned post on Twitter or how smartly you can link to this on Facebook. Just relax and listen to the music. And if you can/will, you will attain moksha, if at all there is something like that. But more than that you will re-discover the God of Lovable Things.
BTW, for God’s sake, please un-ReTweet this post and do tell me when exactly the tear drop rolled out.
Stop.
Click Link.
Close Eyes.
Peace.
subbudu | # | 8:58 pm | Blog | Comments (13)