‘தமிழ்நாடு’ Posts

ஏகப்பட்ட விமர்சனங்களும் குடலாபரேஷன்களும் பண்ணப்பட் எந்திர இசையை கேட்க முடிந்தது. புதிய மனிதனை பூமிக்கு கொண்டு வரும் பாடலில் ஆரம்பித்து இயந்திரப் புகழ் கொஞ்சநஞ்சமில்லை. காதல் அணுக்களில் ரஹ்மான் தெரிகிறார், விஜய் பிரகாஷ் மின்னுகிறார். செந்தேனில் ஒஸ்ஸாபியை பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டதனால் மன்னித்து விடலாம். மற்றபடி காலமாற்றத்தில் மறக்கப்படும் பாடல்கள். ஆடியோகிராபர் ஹெச். ஸ்ரீதரின் மறைவிற்குப் பின் ரஹ்மான் பாடல்களின் மிக்ஸிங் குளறுபடிகள் தெரிகின்றன. அல்லது எனக்கு வயதாகி விட்டது. ஏசிடிசி, மெட்டாலிகா இரைச்சல் இசையை விழந்து விழுந்து கேட்டவனக்கு இந்த திஸ் திங் தட் திங், திஸ் திங் தட் திங்(சேர்த்துச் சொல்லிப் பழகலாம்) ஓசைகள் பிடிக்காமல் போன காரணம் என்னவோ?

ஆக எந்திரன் டிக்கெட் வாங்க பர்ஸ் பணத்தை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமகனுக்கு வாழ்த்துக்கள். உலகத்திலேயே சியாட்டலில் தான் முதல் ஷோ வருகிறது என்கிற சிவாஜி உடான்ஸை மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறார் எதோ ஒரு மகானுபாவர். லைன் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் எதிர்பார்ப்பில்லாமல் போய் பார்த்துவிட்டு எழுதுகிறேன். சுஜாதாவின் கடைசிப் படம் விஞ்ஞானக் கதையாய் இருந்து விட்டதில் ஏதோ செய்தி இருக்கிறது.

வருங்காலத்தில் எல்லோரும் பதினைந்து நிமிடத்திற்கு பிரபலமாய் இருப்பார்கள் என்று சொன்ன வரைகலைஞர் அண்டி வார்ஹோலின் வாய்க்கு சர்க்கரை போடலாம். அல்லது புண்ணாக்கு. மீடியாவில் அதுவும் இந்திய மீடியாவில் எல்லோரும் பதினைந்து நிமிடங்கள் பிரபலமாகிறார்கள். ப.நி.பிரபலங்கள் 15 நிமிடங்களோடு விட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு சானலிலும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆவாது. பாகிஸ்தான்ல வெள்ளம் பற்றி ஹெட்(வெட்)லைன் தெரியுமா என்று கேட்டால், ”சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ரஜினி வீட்டில அக்காரவுடைசல் போட்டாங்களாம்” என்று சொல்லுகிறது தமிழ் ஜனம்.

ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் படித்து முடித்தேன். ரொம்பவே கருப்பாய் இருக்கும் இந்த மேஜிகல் ரியலிச கதையை கதை தெரியாமல் படித்தால் ரசிக்கலாம். தெரிந்துவிட்டிருந்தபடியால் இயல்பான அதன் முதல் பகுதியை ரசிக்கமுடியவில்லை. மேஜிகல் ரியலிச கதைகளில் எழுத்தாளர் சொல்கிற புருடாக்களை நம்புவது முக்கியம். இந்தக் கதையில் டார்த்தீனியத்தின் அபார வளர்ச்சியை நம்பினால் மட்டும் அடுத்த பக்கத்தை திருப்பவும். அவரின் அடுத்த புத்தகமான அசோகவனம் தலையனை சைஸில் கூடிய விரைவில் வரலாம் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் காப்பிக்கு முந்துங்கள்.

இந்த வார கவிதை சிச்சுவேஷன்(இ.வா.கி.ச) -

நேற்றிரவு 1:27க்கு நண்பரை அனுப்பிவிட்டு கதவை மூடும் போது தான் அதை பார்த்தேன். மழை பெய்து கொண்டிருக்கும் நள்ளிரவில் பளிர் மஞ்சள் நிறத்தில் வானத்தை பார்த்தபடி திறந்திருந்தது என் வீட்டின் முதல் பூ. இந்தச் சிச்சுவேஷனுக்கு அரிமா அரிமா டைப் அல்லாமல் தளை தட்டாத வெண்பா, வெண்பாம், லிமரிக் அல்லது ஹைக்கூ எழுதி கவிஞர்கள் அனுப்பினால் இங்கே போடுகிறேன்.

அதைவிடுத்து நான் எழுதிய வரி வார்த்தைகளை அப்படியே
ஒன்றன்
பின்
ஒன்றாக
கீழே
எழுதி
அனுப்புவதாய்
இருப்பதற்கு பதிலாக ஆத்மநாம் சொன்னது போல,”எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்”.


சென்னை சென்ட்ரல்

ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை.

மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய புத்தகங்கள், பலப்பல புது அனுபவங்கள் என்று நாற்பது நாட்கள் ஓடிவிட்டன. கேரளாவில் ஆளப்புழா கோட்டயம் என கொஞ்சம் சுற்றினேன். கோவையை எட்டிப் பார்த்தேன். வாழ்வின் ஒரு மிக முக்கியமான அனுபவம் கிடைத்தது. தி.நகரை காலால் சுற்றி வந்தேன். சென்னை ரொம்பவே மாறியிருந்தது என்று க்ளீஷேவாக ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

உங்களைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சம் தயங்கும் மூன்று விஷயங்கள் நினைத்துக் கொள்ளவும் என்று எழுதியபடி யாரோ ஒரு பிரகஸ்பதி எழுதிய ஸ்பாம் மெயில் கிடைத்தது. ரொம்ப நாள் காணாமல் போய் திரும்பி எழுத வரும் போது, இம்மாதிரியான் ஐஸ் ப்ரேக்கர்கள் உதவலாம். ஆகவே, ஒன்று – காலையில் என்னதான் நேரம் இல்லாமல் இருந்தாலும் ஷவரில் நுழைந்து விட்டால் நேரம் பற்றிய ப்ரக்ஞை போய் விடுகிறது. பாத்ரூமில் கொட்டும் தண்ணீரை யோசிக்க ஆரம்பித்து எதாவது ப்ரைம் நம்பர் கணக்கிலோ புதுமைப்பித்தன் கதை முடிவிலோ போய் நிற்கிறது. இங்கே எழுதப்பட்ட கதை கூட அங்கே தான் தோன்றியது. இரண்டு – ஹாலிவுட்டில் ஹாலிடே படங்கள் என்று ஒரு ஜானர் உண்டு. அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் குடும்ப, ரொமாண்டிக் அல்லது காமெடிக் கதைகள். மற்ற சுமார்ப் படங்களை தாங்க முடியாத எனக்கு இப்படங்கள் பிடிக்கின்றன. இன்று கூட ’இட்ஸ் ஆல் அபவுட் ஹாலிடேஸ்’ என்ற ரொம்பவே போர் படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். ஒரே பண்டிகையை வைத்து இத்தனை கதைகளா? மூன்று – சட்டென ஏதும் தோன்றாததால்…பின்னர்.


February 17th, 2010

And that's how

Picked up a dozen packs of Milk Bikis from the local Indian store. It was in a new wrapper. I was shocked. While tripping in Chennai, I bought a Milk Bikis pack in a totally new packaging and found the design of biscuit completely changed. Instead of Britannia embossed in the middle and surrounded by flower patterns, it had squares all over the biscuit. That wasn’t the biscuit design thats imprinted in me. After all its probably the only biscuit of choice on any given day followed by Bourbon by the same company. Even though it had the same taste, it felt like a different biscuit.

So I was indeed shocked looking at the new pack today. When opened, to my relief, I found it had the same design. Somehow they haven’t changed the design, atleast yet, for the exports. So that’s good. And that’s how I got my biscuit back.

More Biki love, here and here.


October 21st, 2009

Your City

I always believed it was the things you don’t choose that makes you who you are. Your city, your neighborhood, your family. People here take pride in these things, like it was something they’d accomplished. The bodies around their souls, the cities wrapped around those.

I wanted to quote this from Gone Baby Gone, when I read this post from Krish. BTW, GBG was a well written directorial debut from Ben Affleck. Yes, Ben Affleck as in Bennifer(Ben+Jennifer Lopez).


சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.