<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>subbudu.com &#187; சுஜாதா</title>
	<atom:link href="http://subbudu.com/category/sujatha/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://subbudu.com</link>
	<description>life-u reverse gear-u</description>
	<lastBuildDate>Mon, 26 Mar 2012 07:09:28 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=</generator>
		<item>
		<title>sujatha: one more year later</title>
		<link>http://subbudu.com/2012/02/sujatha-one-more-year-later/</link>
		<comments>http://subbudu.com/2012/02/sujatha-one-more-year-later/#comments</comments>
		<pubDate>Mon, 27 Feb 2012 08:40:04 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[Book]]></category>

		<guid isPermaLink="false">http://subbudu.com/?p=2074</guid>
		<description><![CDATA[18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா? ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்கு பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப்போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்கு புரிகிறது. கதையின் எதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார். 19. அதற்குக் கதை புரியவேண்டும் அல்லவா? ஆம். கதை வாசகருக்கு புரியவேண்டியதை மிக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><object width="600" height="450"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&amp;server=vimeo.com&amp;show_title=0&amp;show_byline=0&amp;show_portrait=0&amp;color=ffffff&amp;fullscreen=1" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&amp;server=vimeo.com&amp;show_title=0&amp;show_byline=0&amp;show_portrait=0&amp;color=ffffff&amp;fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="600" height="450"></embed></object></p>
<blockquote><p>18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா?</p>
<p>ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்கு பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப்போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்கு புரிகிறது. கதையின் எதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.</p>
<p>19. அதற்குக் கதை புரியவேண்டும் அல்லவா?</p>
<p>ஆம். கதை வாசகருக்கு புரியவேண்டியதை மிக முக்கியமாக கருதுபவன் நான்.</p>
<p>20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?</p>
<p>அவர்களைப் &#8212;- &#8212; &#8212;&#8212;.</p>
<p>- சுஜாதா [சிறுகதை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், 1998.] [தொகுப்பு: கடவுள்களின் பள்ளத்தாக்கு] </p></blockquote>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2012/02/sujatha-one-more-year-later/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதா இங்கே ஒளிந்திருக்கிறார் (pun intended)</title>
		<link>http://subbudu.com/2011/02/sujatha-3rd-anniversary/</link>
		<comments>http://subbudu.com/2011/02/sujatha-3rd-anniversary/#comments</comments>
		<pubDate>Sun, 27 Feb 2011 13:15:46 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>

		<guid isPermaLink="false">http://kirukkal.com/?p=768</guid>
		<description><![CDATA[மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம் 24 ரூபாய் தீவு முகுந்தன் அனிதா பசித்த புலி ’வசந்த’குமாரன் அப்ஸரா நகரம் பாதி ராஜ்யம் பதினாலு நாட்கள் கணேஷ் சு பெண் இயந்திரம் கடவுள் வந்திருந்தார் ஜூனோ ஆஸ்டின் இல்லம் இன்னமும் பெண் கனவுத் தொழிற்சாலை விக்ரம் நில் கவனி தாக்கு கணையாழியின் கடைசிப் பக்கம் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு ஜா ப்ரியா ஜன்னல் மலர் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தீண்டும் இன்பம் மாயா நைலான் கயிறு ஆதலினால் காதல் செய்வீர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><object width="600" height="450"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&amp;server=vimeo.com&amp;show_title=0&amp;show_byline=0&amp;show_portrait=0&amp;color=ffffff&amp;fullscreen=1" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&amp;server=vimeo.com&amp;show_title=0&amp;show_byline=0&amp;show_portrait=0&amp;color=ffffff&amp;fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="600" height="450"></embed></object></p>
<p>மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம் 24 ரூபாய் தீவு முகுந்தன் அனிதா பசித்த புலி ’வசந்த’குமாரன் அப்ஸரா நகரம் பாதி ராஜ்யம் பதினாலு நாட்கள் கணேஷ் <strong>சு</strong> பெண் இயந்திரம் கடவுள் வந்திருந்தார் ஜூனோ ஆஸ்டின் இல்லம் இன்னமும் பெண் கனவுத் தொழிற்சாலை விக்ரம் நில் கவனி தாக்கு கணையாழியின் கடைசிப் பக்கம் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு <strong>ஜா</strong> ப்ரியா ஜன்னல் மலர் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தீண்டும் இன்பம் மாயா நைலான் கயிறு ஆதலினால் காதல் செய்வீர் எப்போதும் பெண் பாரதி இருந்த வீடு அகப்படும் வரை திருடனல்ல கற்றதும் பெற்றதும் <strong>தா</strong> மாஞ்சு பாலம் ஆ என் இனிய இயந்திரா அனிதா &#8211; இளம் மனைவி யவனிகா பத்து செகண்ட் முத்தம் மெரினா ஓடாதே 6961 அடிமைகள் அப்பா அன்புள்ள அப்பா குருபிரசாதின் கடைசி தினம்&#8230;சுஜாதா.</p>
<p>அல்லது <a href="http://www.sujathalogy.com/">sujathalogy</a>யில்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2011/02/sujatha-3rd-anniversary/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜீவனோபாயம்; எழுத்தாளன்</title>
		<link>http://subbudu.com/2009/04/writing-for-bread/</link>
		<comments>http://subbudu.com/2009/04/writing-for-bread/#comments</comments>
		<pubDate>Tue, 28 Apr 2009 03:53:57 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[மனிதர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=275</guid>
		<description><![CDATA[சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய &#8211; ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட &#8211; எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய &#8211; ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட &#8211; எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ சொன்னார். அவருடைய அப்பாவும் என்னை மாதிரியே, அவருடைய நாயை நாய் என்று விவேக் எகுறிப்பிட்டால் “நீதான்டா நாய்; இவனை ஏன்டா நாய் என்று சொல்லுகிறாய்?” என்பாராம்.</p>
<p>இதேபோல் அவர் தனது சொந்தப் பிரச்சினைகளையும் எழுதியதே இல்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜீவனோபாயத்துக்காக வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து வந்தார். கடைசிக் கட்டத்தில் ஒரு அலுவலகம். ஒரு சிறிய அறை. சுஜாதாவோ ஆறு அடிக்கு மேல் உயரம். ஆறேகால் கூட இருக்கலாம். காலை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். எழுந்து நின்றால் மேலே தலை இடிக்கும். யாராவது விசிட்டர் வந்தால் சுஜாதா அவரை வெளியே வந்துதான் சந்திக்க வேண்டும். உள்ளே அவர் அறையில் இடம் இருக்காது. இப்படி ஒரு கல்லறை மாதிரியான ஒரு அறையில் தனது கடைசி காலத்தில் அவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்யாவிட்டால் அவருடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாகி இருக்கும். எழுத்தின் மூலம் வரும் பணம் அவருக்கு ஒருநாளைக்குக் காணும். மீதி 29 நாட்களுக்கு எங்கே போவார்? இதைப் பற்றியெல்லாம் அவர் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா? எழுத மாட்டார்.</p></blockquote>
<p>இந்த இரு பாராக்களை எழுதியவர் ஒரு &#8216;fantasy writer&#8217;. எந்த ஒரு எழுத்தாளைனையும் படிக்காமல், சூழ்நிலைக்கேற்ப தான் எழுதியதையே மாற்றி மாற்றி எழுதும் கலகக்கார so-called-எழுத்தாளர்கள் இருக்கும் வரை மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்கள் தான்.</p>
<p>மேலே உள்ள இரண்டு பாராக்களை பிரித்து மேய்ந்து எழுத முடியும். எழுதினால் எனக்கும் இதை எழுதியவருக்கும் வித்தியாசம் இருக்காது. முக்கியமான விஷயங்கள் &#8211; சுஜாதா தன்னுடைய கடைசி பத்து வருடங்களாக எழுதியவை சுயசரிதை தன்மையுடைய கட்டுரைகளே. அவரே கற்றதும் பெற்றதுமில், விகடன் பாலசுப்பிரமணியன் சுயசரிதை எழுத சொன்னதாகவும். சுயசரிதை எழுதினால் வம்பு வரும் என்பதால், கற்றதும் பெற்றதும் போல எல்லாம் கலந்த பத்தி எழுதலாம் என தீர்மானித்தார் என்கிறார். கற்றதும் பெற்றதுமின் முதல் வருடத்தில் அவர் எழுதிய சுயசரிதை சம்பவங்கள் பல. இதையெல்லாம் தவிர தன் அப்பா மறைந்தவுடன் எழுதிய அப்பா அன்புள்ள அப்பா முதல் முதல் ப்ளைட் ஓட்டிய அனுபவம், வீடு மாறிய அனுபவம், பெண் பார்த்த அனுபவம், குடும்பத்துடன் எல்டிசியில் தமிழ்நாடு டூர் போன அனுபவம் என அவர் தன்னுடைய சுயசரிதையை பிரித்து பிரித்து பல இடங்களில் எழுதியிருக்கிறார்.</p>
<p>இந்த பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜீவனோபாயத்துக்காக என்கிற வார்த்தையை கவனிக்கவும். இந்தப் பாரா முழுவதும் பொய் என சுஜாதாவே எழுதியதை வைத்தே சொல்ல முடியும். பணத்தை பற்றி தனது கவலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டதாகவும், தான் தற்போது எழுதுவது எல்லாம் ஒரு ஆர்வத்தினால் மட்டுமே என்று பலப்பல முறை கூறியிருக்கிறார். கடைசி வரை பணத்துக்காக அன்றி நண்பர்களுக்காக மட்டும் சினிமா வசனம் எழுதியவரை பற்றி அவரது இறப்புக்கு பிறகு திரித்து எழுதுவது இங்கே மட்டுமே சாத்தியம்.</p>
<p>ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் செய்து இவரின் வலைதளத்தை மேய்ந்ததால் கிடைத்த பிற விடயங்கள், இந்த எழுத்தாளருக்கு சமீபத்தில் வாசகர் வட்டம் அதிகரித்து இருக்கிறதாம். அமெரிக்க பல்கலைகழகத்தில் படிக்கிறார்களாம். சினிமா விமர்சனம் என்னும் பேரில் கதாகாலட்சேபம். ஹிட் ரேட் கூடியிருக்கிறதாம். கமல் படிக்கிறாராம். கொண்டாடுகிறார்களாம். கொஞ்சம் காமெடி டைம் நிறைய Hallucination.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/04/writing-for-bread/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>He gets it !!</title>
		<link>http://subbudu.com/2009/02/he-gets-it/</link>
		<comments>http://subbudu.com/2009/02/he-gets-it/#comments</comments>
		<pubDate>Fri, 27 Feb 2009 08:02:51 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[பதிவுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=229</guid>
		<description><![CDATA[கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ். எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://farm4.static.flickr.com/3554/3312807515_4584031f64_o.jpg" alt="writer sujatha" /></p>
<p>கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.</p>
<p>எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், <em>he gets it</em>. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.</p>
<p>கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.</p>
<p><a href="http://www.sujathalogy.com/">சுஜாதாலஜி</a>யில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.</p>
<p>ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.</p>
<p>எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/he-gets-it/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 6</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-6-veedu-maariya-kathai/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-6-veedu-maariya-kathai/#comments</comments>
		<pubDate>Tue, 24 Feb 2009 08:49:28 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[மனிதர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=222</guid>
		<description><![CDATA[பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடிவைத்துவிட்டுப் போய்விட்டார்.</p>
<p>மாமி நடுராத்திரியில் எழுந்து துணி தோய்ப்பாள்&#8230;அதுவும் தோய்க்கிற கல்லைக் கணவன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து ’ஸ்&#8230;ஸ்’ என்று பி.ஜி.எம் கொடுத்துக் கொண்டு. இது ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி ‘என்’ ப்ளாக்கில் களீக் ஒருத்தரின்  மாமனார் வீடு வாடகைக்கு வந்தது &#8211; அதற்கு மாறினோம். ’உன்னைப் போல் ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை’ என்று கண்ணால் தண்ணீர்விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.</p>
<p>- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2002.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-6-veedu-maariya-kathai/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 5</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-5-ennseer-viruththam/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-5-ennseer-viruththam/#comments</comments>
		<pubDate>Tue, 24 Feb 2009 06:30:33 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=219</guid>
		<description><![CDATA[அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் - ‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல, வீணான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் -</p>
<p>‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல,<br />
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்<br />
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு<br />
‘வார்முலைகள்’, ‘தமிழன்னை’ எதுவும் இன்றி<br />
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,<br />
நீண்ட முடி, நகங்கடித்தல் போன்றவற்றை<br />
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பினீரேல்,<br />
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகின்றேன்.’</p>
<p>- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2000.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-5-ennseer-viruththam/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 4</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-4-eppothum-penn/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-4-eppothum-penn/#comments</comments>
		<pubDate>Tue, 17 Feb 2009 16:14:14 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[மனிதர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=215</guid>
		<description><![CDATA[அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள&#8230; அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள&#8230;</p>
<p>அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம்.</p>
<p>மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு&#8230;</p>
<p>அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள்.</p>
<p>அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.</p>
<p>- எப்போதும் பெண், மங்கையர் மலர் &#8211; 1982.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-4-eppothum-penn/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 3</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-3-ratham-orey-niram/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-3-ratham-orey-niram/#comments</comments>
		<pubDate>Sun, 15 Feb 2009 23:47:30 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=210</guid>
		<description><![CDATA[”குட்மார்னிங் ஸார்!” மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான். பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள். மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>”குட்மார்னிங் ஸார்!”</p>
<p>மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.</p>
<p>பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.</p>
<p>மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.</p>
<p>வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.</p>
<p>- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) <a href="http://www.uyirmmai.com/publications/bookDetails.aspx?bid=61">ரத்தம் ஒரே நிறம்</a>, ஆகஸ்ட் 1983.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-3-ratham-orey-niram/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 2</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-2-delhi/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-2-delhi/#comments</comments>
		<pubDate>Fri, 13 Feb 2009 06:04:43 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=203</guid>
		<description><![CDATA[பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்). உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).</p>
<p>உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.</p>
<p>சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி&#8230;</p>
<p>டில்லி மாறவில்லை.</p>
<p>- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-2-delhi/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுஜாதாட்ஸ் &#8211; 1</title>
		<link>http://subbudu.com/2009/02/rem-sujatha-1-irukodugal/</link>
		<comments>http://subbudu.com/2009/02/rem-sujatha-1-irukodugal/#comments</comments>
		<pubDate>Thu, 12 Feb 2009 06:11:53 +0000</pubDate>
		<dc:creator>subbudu</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[சுஜாதா]]></category>
		<category><![CDATA[பயாஸ்கோப்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kirukkal.com/?p=191</guid>
		<description><![CDATA[’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://farm4.static.flickr.com/3334/3273080047_e57de7dc0d_o.jpg"/></p>
<p>’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன்  X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு  ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.</p>
<p>- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://subbudu.com/2009/02/rem-sujatha-1-irukodugal/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Minified using disk: basic
Page Caching using disk: enhanced
Database Caching 13/20 queries in 0.014 seconds using disk: basic

Served from: subbudu.com @ 2012-05-21 11:49:44 -->
