scribbles

December 6th, 2011

பிரசண்டேஷன் தேவையா?

Stress எனப்படுவது என்ன நாம் யோசிக்கும் முன், ஸ்ட்ரஸ் பற்றி ஒரு நாளில் எத்தனை முறை கதைக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கலாம். ஆபீஸின் வாட்டர் கூலர் பேச்சுகளில், காபி குடித்துக் கொண்டே, லிப்டில் பயணிக்கும் போது, இஸ்திரி போடுகையில், மனைவியிடம், மானேஜரிடம், பங்குச் சந்தையில், பட்ஜெட் வேடிக்கையில் எனப் பலப்பல முறை ஸ்ட்ரஸ் ஆகிறோம் மற்றும் அதைப் பற்றி பேசுகிறோம். மனச் சோர்வு என்பது Stressன் சுமாரான தமிழாக்கம் மட்டுமே. மனத்தை தாண்டி பாதிக்கப்படுவதை விவரிக்காமல் விட்டுவிட்டது தான் மிகப்பெரிய தப்பு எனத் தோன்றுகிறது.

ஒரு மானோ வரிக்குதிரையோ மேய்ந்து கொண்டிருக்கிறது அல்லது வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தனக்கு தேவையான உணவு காலரிகளை தேடி அலைகிறது. மற்ற நேரம் வானத்தைப் பார்த்தபடியோ தன் மற்ற உறவினர்களை கொஞ்சியபடியோ செலவழிக்கிறது. இந்த மானை இரை தேடி வரும் ஒரு சிறுத்தை துரத்தும் போது, விட்டதை போட்டு விட்டு உயிருக்கு ஓடும் அந்த ஓட்டம் தான் ஸ்ட்ரஸ். அது தான் அந்த மானுக்கு ஏற்படும் மிகப்பெரிய stressful situation.

அந்த நொடியில் அம்மானின் ஏற்படும் உடல் இயக்கத்தை சற்றே வேகம் குறைத்துப் பார்க்கலாம். சிறுத்தையை ஓரக்கண்ணில் பார்க்கும் வினாடியில் மானின் மூளை ஓடு எனக் கட்டளையிட, மற்ற அத்தனை உடல் இயக்கங்களும் சட்டென நின்று விடுகின்றன. பசியோ உறக்கமோ மற்ற உடல் இச்சைகளோ தடைப்பட்டு அத்தனை ரசாயனங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்க்காகத்தான். அதன் மூலம் உடலெங்கும் ரத்தம் அனுப்பப்பட்டு தசை நார்கள் வேகமாக நகர மான் ஓட்டமாய் ஓடுகிறது. ஆக இந்த மிகக் கடினமான ஓட்டத்திற்காக மற்ற இயக்கங்கள் வழிவிடுகின்றன. ஓட்டத்திற்கு பிறகு…பிறகு என்பது அந்த மானுக்கு இருந்தால் சிறுத்தையிடம் இருந்து தப்பித்த இரண்டு அல்லது மூன்றாம் நிமிடத்தில் உடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. ஸ்ட்ரஸ் போய் விடுகிறது.

நம்போல் எப்போதும் ஸ்ட்ரஸில் இருக்கும் ஒரு மனிதனின் உடல் எந்த மாதிரி கடும் உழைப்பிற்கு உள்ளாகும் என யூகித்தால் கூட ஸ்ட்ரஸ் வந்து விடும். மானின் அந்த பத்து நிமிட ஸ்ட்ரஸ் மனிதனுக்கு ஆறு மாதம் இருந்தால் கூட அவன் உடம்பிற்கு மேலும் இரண்டு வருடங்கள் வயதாகிவிடுவதாக சொல்லுகிறார்கள். அமெரிக்காவில் ஸ்ட்ரஸ் என்பதால் அல்சர் வருவாதாய்த் தான் அறுபதுகளில் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இருபது வருடங்கள் கழித்து தான் அதன் காரணம் புரிந்தது. ஸ்ட்ரஸ் இருக்கும் போது மேலே சொன்ன உடல் இயக்கங்கள் தடைபடும் போது உடல் தடுப்பாற்றல் இழந்து எல்லாவிதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளே நுழைய அல்சர் உட்பட எல்லா நோய்களும் வந்து விடுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாய் எதற்காகவோ எப்போதும் வேகமாய் நகர்ந்து கொண்டே பதட்டமாய் நடமாடுகிற இக்காலத்தில் ஸ்ட்ரஸ் என்பது இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டே, சதா இரண்டு கைகளால் சாப்பிடுபவனை நாமோ,” எப்படி சார் உங்களுக்கு இவ்ளோ டைம் இருக்கு” எனக் கேட்டு அவனை பெருமைப்படுத்தி சீக்கிரமே மேலே அனுப்ப தயாராக்குகிறோம். இதைத் தான் மனச்சோர்வு என்று சொல்வதை விடுத்து மகா-சோர்வு என உண்மை உரைக்கச் சொல்லாம். மகாசோர்வை ஒழித்துக் கட்ட முதல் கட்டம் அதைப்பற்றி அறிந்து கொள்ளுதல் தான். தனக்கு மகாசோர்வு ஏற்படும் தருணங்களை புரிந்து கொள்ளுதலும் அதை கழட்டி விடுவது எப்படி என முடிவெடுப்பதற்கு முக்கியம்.

0000

”நாளைக்கு ஒரு ப்ரசண்டேஷன் பண்ணனும் நீங்க…” என்று முடிக்கும் முன் உடனே பவர்பாயிண்டை திறந்து வைத்துக் கொண்டு மோட்டுவளைக் கவிஞர் போல யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பவர்பாயிண்டை சரியாக உபயோகிக்காமல் அதை வைத்துக் கொண்டு யோசிப்பதன் விளைவு தான் தாங்க முடியாத கருத்துரை, வரவேற்புரை, பொழிப்புரை மற்றும் இன்னபிற உரைகள்.

பவர்பாயிண்ட் என்பது கடைசியில் வருவது. முதலில் வரவேண்டியது என்ன சொல்லப்போகிறோம், எப்படி சொல்லப்போகிறோம், ஏன் சொல்லப் போகிறோம் போன்ற தனக்கான கேள்விகள். இக்கேள்விகளை டிஜிட்டல் அல்லாத முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெள்ளைப் பலகையிலோ, போஸ்-இட்களிலோ எழுதப்படும் ப்ரசண்டேஷன்கள் திருத்தப்பட்டு கடைசியிலேயே பவர்பாயிண்டில் வரையப்படுகின்றன. இம்மாதிரி ப்ரசண்டேஷன் செய்வதற்காக நம்மை தயார்ப்படுத்தும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் டிசைன் பள்ளிகள் இருந்தும் மோசமான ப்ரசண்டேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதை சுலமாக்க நான்கு விதிகளை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதலாவது, சிங்கிள் டீ குடித்துக் கொண்டே, சொல்லப் போகிற விஷயம் என்ன என தீர்மானிப்பதும் மற்றும் உங்களின் நண்பர்கள் அல்லது குழுவுடன் விவாதிப்பது. அதாவது brainstorming.

2வது, மேலே சேர்க்கப்பட்ட எண்ணங்களை ஒரு முகப்படுத்துவது. உங்கள் வழங்குதலின்(presentation) முக்கிய கருத்து ஒன்றை தீர்மானிப்பது. இரண்டு மூன்று இருபது கருத்துக்கள் சொன்னால் புரியாமல் போய்விடும். ஆக ஒரு ப்ரண்டேஷனுக்கு ஒரு முக்கிய கருத்து. அம்புடுதேன்.

மூன்றாவது, எப்படி வழங்கப் போகிறோம் எனத் தீர்மானிப்பது. Storyboarding. வெள்ளைத் தாளில் சொல்ல வருவதை கையினால் படம் போட்டு எழுதிக் கொள்வது. இது இல்லாமல் பவர் பாயிண்டை திறப்பது, ஸ்கிரிப்ட் இல்லாமல் ஷூட்டிங் போவது போல் அபாயகரமானது. இந்த வகையில் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வைத்து ஒரு வழியாக ப்ரசண்டேஷனின் வடிவம் வந்து விடுகிறது.

கடைசியாக பவர்பாயிண்டடுகள், கலர்கள், படங்கள், அனிமேஷன்கள் ஆகியன. அனிமேஷன் இல்லமல் புல்லட்டுகள் இல்லாமல் அதிகமாய் எழுதாமல் வெறும் படங்களாலேயே சொல்லப்படும் வழங்குதல்கள் தான் ரசிக்கப்படுகின்றன என்கிறார்கள். கதை கேட்டு வளர்ந்த ஜென்மங்கள் நாம். இது எல்லா வழங்குதல்களிலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. முடிகிற போது செய்யாதது தான் குற்றம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ப்ரசண்டேஷன் என்றால் எதாவது படம் காட்டித் தான் பேச வேண்டும் என்பது அல்ல. முதலில் ப்ரசண்டேஷனே தேவையா என்ற கேள்வியை கேட்கலாம். வெறும் ஈமெயில் மெமோ அனுப்பினால் போதாதா? அல்லது ஒரு அறையில் ஒன்று கூடி பேசிவிடலாமா? இவையெல்லாம் முடியாதென்றால் வருகிறவர்களின் நேரத்தை மதித்தாவது எளிமையாக ப்ரசண்டேஷன் செய்ய முயற்சிப்பது ஒரு மினிமம் கடமை.

-

- இன்ன பிற பத்தி March 1, 2011.

  • let'em know:
subbudu | # | 1:21 am | இன்னபிற, இயந்திரா, மற்றவை | Comments Off
November 24th, 2011

Why we like kolaveri?

I wanted to write a post summarizing the events that unfolded over the weekend when kolaveri went viral. Medianama did that quite well, for the most part. However three things that needs to be called out –

One, the making video itself was a make believe. The shots of Dhanush singing were just looking like lip sync and hence. Even though the song needs very little vocal effort, the recording must have happened before the video and these shots were made either during improvisation or just shot for this ‘making of’ video. This could very well be my speculation but I do think the level of professional work that has gone into this making video and the description below the video that says, ‘chinna surprise’ doesn’t gel very well. Its a very successful attempt at making a video viral. Well done!

Two, Now that everyone has reacted to this song, which is good in a way, very soon the overkill is going to make many of us frown. From blogposts to tweets, the hate will become wide spread. It would be in the best interest of the album that they release the soundtrack asap.

Three – Premji is going to use this in the next venkat prabhu film. Enna bet?

P.S: If you are wondering about the song that’s being talked about here, you must be time-travelling. Here.

  • let'em know:
subbudu | # | 2:48 am | Kollywood | Comments (2)
November 22nd, 2011

It doesn’t matter

This isn’t a quote rather its the entire(!) first chapter of Roger Rosenblatt’s – Rules for Aging: A Wry and Witty Guide to Life. Was talking to a friend about something today and recollected this during the discussion. I read this book earlier in the year and this particular chapter stayed with me. Succinctly put.

Whatever you think matters—doesn’t. Follow this rule. and it will add decades to your life. It does not matter if you are late, or early; if you are here, or if you are there; if you said it, or did not say it; if you were clever, or if you were stupid; if you are having a bad hair day, or a no hair day; if your boss looks at you cockeyed; if your girlfriend or boyfriend looks at you cockeyed; if you are cockeyed; if you don’t get that promotion, or prize, or house, or if you do. It doesn’t matter.

  • let'em know:
subbudu | # | 8:21 pm | Book | Comments Off
April 1st, 2011

Not to be shared

Not a big fan of quotes because they may be different in the context they were spoken. However, this one seems vital to the world we live in. Especially the first part of it. And BTW! sharing this post on any online social forum would be ironical.

Every form of happiness is private. Our greatest moments are personal, self-motivated, not to be touched. Those things which are sacred or precious to us are the things we withdraw from promiscuous sharing. But now we are taught to throw everything within us into public light and common pawing. To seek joy in meeting halls. We haven’t even got a word for the quality I mean—for the self-sufficiency of man’s spirit. It’s difficult to call it selfishness or egotism, the words have been perverted…

- from Ayn Rand’s Fountain Head, just in case you didn’t catch that.

  • let'em know:
subbudu | # | 3:52 pm | Rant | Comments Off
February 28th, 2011

யார் தவறு?

”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

  • let'em know:
subbudu | # | 10:29 pm | இன்னபிற, உலகம், எழுத்தாளர்கள், பதிவுகள், மற்றவை, மீடியா | Comments Off

scribbles ?

subbudu a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about intellectual stuff and still on the only(!) belief that he is a geek!!
read the archives>>




« Previous Entries

Next Entries »